Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைநகரின் பிரசித்திபெற்ற வேணன் அணைக்கட்டை வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட 3 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணியை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், இன்று திங்கட்கிழமை (31) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
காரைநகர் குடிநீர் பற்றாக்குறைவு நிலவுகின்ற ஒரு பிரதேசம். இதனால், மழைநீரை வீணாகக் கடலினுள் கலக்கவிடாது தேக்கி நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் வேணன் அணைக்கட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு விவசாயிகள் சிலர் வேணன் அணைக்கட்டைச் சேதமாக்கியதால், தேக்கப்பட்டிருந்த மழைநீர் கடலுடன் கலந்தது.
இவ்விடயம் விவசாய அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து ஏறத்தாழ 7,000 மணற்பைகளின் உதவியோடு சேதமாக்கப்பட்ட அணைக்கட்டுப்பகுதி அப்போது தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டது.
தற்போது அணைக்கட்டை நிரந்தரமாகவே புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கென வடமாகாண விவசாய அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அணையைப் புனரமைப்பதன் மூலம் வலந்தலை, பிட்டியோடை, ஊரி மற்றும் மொந்திபுலம் கிராம மக்களைச் சேர்ந்த 500 விவசாயக் குடும்பங்கள் பயனடைவதுடன், 250 ஏக்கர் அளவில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .