Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
கிராமங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு கிராமஅலுவலர் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர்களுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திங்கட்கிழமை (12) பரிந்துரை செய்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் ஆகியோருக்கு இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டன.
பொலிஸ் கடமை புரியும் சமாதான அதிகாரியாக கிராமஅலுவலரை எழுத்து மூலமாக நியமிக்கவும், ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் தேவையான வகையில் விழிப்புக்குழு, சமாதானக்குழு, மக்கள் குழு என்பவற்றை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரின் உதவியுடன் செயற்படுத்துமாறு பிரதேச செயலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மாவட்டச் செயலர்களுக்கு பரிந்துரை செய்தார்.
கிராமஅலுவலர் தமது பிரதேசத்தில் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச செயலர்கள், பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்மூலம் சிறுகுற்றங்கள், சமூகவிரோதக் குற்றங்கள், ஏனைய குற்றங்கள் தொடர்பில் கிராமஅலுவலர் பொலிஸாருக்கு உடன் தெரிவித்து, குற்றங்களை தடுக்கும் வகையில் செயற்படவேண்டும்.
இது தொடர்பான விழிப்புணர்வை கிராமஅலுவலர்களுக்கு வழங்குமாறும், தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையில் எந்தவொரு நபரும் சட்டத்தை கையில் எடுத்தலாகாது. பிரதேச குற்றங்களை சட்டரீதியாக தடுக்க பொலிஸார், கிராமஅலுவலர் ஒத்துழைப்பு வழங்கவும் என நீதிபதி குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago