2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

குரேயின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். பல்கலை மாணவர்கள்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம், மாணவர்களால் ஆளுநருக்கே திருப்பிய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் வட மாகாண ஆளுநர் அனுப்பி வைத்த கடிதம், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடந்த திங்கட்கிழமை (24) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களினால் வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வடமாகாண ஆளுநர், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினால், மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு கண்டனம் வெளியிட்டும் நீதி வேண்டும் எனக் கோரியும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

இந்த மகஜருக்கான பதில் கடிதத்தை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்குச் சிங்கள மொழியில் மாத்திரமே அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தையே, மாணவர்கள், திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X