2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குற்றங்களை கட்டுப்படுத்த நீதவான் ஆலோசனை

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி, இராஜகிராமம் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகள் பற்றி தெளிவுபடுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு,  பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த பகுதியின் கிராம சேவையாளர், நீதிமன்ற சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரி மற்றும் சட்ட ஆலோசகருக்கு இடையிலான கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (22) நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, சமுதாயம் சார் சீர்திருத்த அதிகாரியினால்  செய்யவேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய உளவள ஆலோசனை, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் ஆலாசனைகள், இளைஞர்களுக்கு தொழில் வழிகாட்டல் போன்றவை தொடர்பாக,  நீதவான் ஆலோசனை வழங்கினார்.

இதேவேளை, கிராமங்களில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்த வேண்டிய அணுகுமுறை, அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட பணி தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதுடன், பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துமாறும் நீதவான் தெரிவித்தார். அத்துடன் விழிப்புக்குழுக்களை ஏற்படுத்தி இரவில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .