Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி நகரத்தில் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது.
ஏ - 9 வீதி மற்றும் புகையிரதப் பாதை என்பன புனரமைக்கப்பட்ட போது, பலவிடங்களில் சீரான கால்வாய்கள் அமைக்கப்படாததன் காரணமாக மக்கள் கூடும் இடங்களில் மழைவெள்ளம் தேங்கிநிற்கின்றது.
கடைகளுக்கு முன்னால் வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதன் காரணமாக டெங்கு போன்ற தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டங்களில் மழை நீர் பல விடயங்களில் தேங்கிநிற்பது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்பதும் மழைவெள்ளம் வழிந்தோடுவதற்கான வழிவகைகள் இதுவரையில் உருவாக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
27 Jun 2025
27 Jun 2025