2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிளிநொச்சியில் சர்வதேச முதியோர் தினம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண சமூகசேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் 'நிலைத்திருக்கக்கூடிய விதத்தில் முதியோரின் வயதுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற நகரசூழல்' என்னும் தொனிப்பொருளில் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது.

வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கமும் கலந்துகொண்டார். முதியோர்களுக்கான நிகழ்சிகளும், முதியோர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசும் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .