2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் தற்போது 80 வீதமான நெற்பயிர்ச்செய்கை

Gavitha   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் தற்போது 80 வீதமான நெற்பயிர்ச்செய்கை நிலங்களில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பருவமழை ஆரம்பித்துள்ளமையால் கிளிநொச்சியில் 59 ஆயிரம் வரையான நிலப்பரப்பில் விவசாயிகள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் இரணைமடுக்குளத்தின் கீழ் 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும் பூநகரி, கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, கிளாலி, இயக்கச்சி ஆகிய இடங்களிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை பூநகரி விவசாயிகளுக்கு கடந்த வாரம் முதல் கிருமிநாசினிகள், உரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

தற்போது இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் பயிர்ச்செய்கைக்கான நீர்விநியோகம் தொடர்ந்து வழங்கப்படும் என நீர்ப்பாசன திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X