2025 ஜூன் 28, சனிக்கிழமை

கிளி பிடிக்க முற்பட்டவரை பாம்பு தீண்டியது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-   நா.நவரத்தினராசா

யாழ். சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள தென்னை மரமொன்றில் ஏறி கிளியைப் பிடிப்பதற்கு  முற்பட்ட பாடசாலை மாணவனை இன்று திங்கட்கிழமை (05) நாகபாம்பு தீண்டியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மல்லாகம் மகா வித்தியாலத்தில் தரம் -10 இல் கற்கும் மாணவனான ரவி மோகனதாஸ் (வயது 15) என்ற மாணவனுக்கே பாம்பு தீண்டியுள்ளது.

தென்னை மரத்தில் ஏறி மரத்திலிருந்த பொந்துக்குள் கைவிட்டபோது, அதற்குள் இருந்த பாம்பு மாணவனைத் தீண்டியுள்ளது. ஏதோ கடித்துவிட்டது என்ற நினைப்பில் மாணவன் அதனை அலட்டிக்கொள்ளவில்லை. மாணவனின் கை வீக்கமடைந்த பின்னரே பாம்பு தீண்டியமை பெற்றோருக்குத் தெரியவந்ததையடுத்து, வைத்தியசாலையில் மாணவனை அனுமதித்தனர்.
.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .