2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

முகவரி கேட்டவரிடம் பணம் பறித்த இருவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் பணத்தைப் பறிகொடுத்தவரால் அடையாளம் காட்டப்பட்டனர்.

இதனையடுத்து, இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டார்.

துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தான் ஒருவரிடம் கைமாற்றாக வாங்கிய 93 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுப்பதற்காக அல்வாய் பகுதிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சென்றுள்ளார்.

பணம் தந்தவரின் வீட்டை மறந்த அவர், வீதியில் நின்றிருந்த இருவரிடம் முகவரியை விசாரித்துள்ளார். முகவரி காட்டுவதாக கூட்டிச் சென்ற சந்தேகநபர்கள் இருவரும், கத்தியைக் காட்டி அவர் கொண்டு வந்த 93 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

பணத்தைப் பறிகொடுத்த நபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டபோதே அடையாளம் காட்டப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X