2025 ஜூன் 26, வியாழக்கிழமை

குழை வெட்டச் சென்றவர் விபத்தில் மரணம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்

அல்வாய் கிழக்கு, மடத்தடி பகுதியில் ஆடுகளுக்கு குழைகளை, ஞாயிற்றுக்கிழமை வெட்டச் சென்ற புலோலி, காந்தியூரைச் சேர்ந்த பொன்னையா கிருஸ்ணபிள்ளை (வயது 75) என்பவர், மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை மோதிய மோட்டார் சைக்கிள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .