2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கைவிடப்பட்ட தோட்டத்துக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

எழுதுமட்டுவாள் 52ஆவது படைப்பிரிவின் முகாமுக்கு முன்பாகவுள்ள கைவிடப்பட்ட தோட்டக் காணிக்குள் இருந்து வெள்ளிக்கிழமை (18) கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியால் நடந்துசென்ற பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைக்குண்டு இருப்பது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கமைய இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .