2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை பனிப்புலம் சந்தியில் கடந்த வியாழக்கிழமை (11) இரவு 2 கிலோ 35 கிராம் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபரை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார்.

கஞ்சா பொதிகளை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கோடு, 38 வயதுடைய குறித்த சந்தேகநபர், பனிப்புலம் சந்தியில் நின்றுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், அவரைக் கைதுசெய்து சோதனையிட்ட போது, கஞ்சாவுடன் கொழும்புக்கு செல்ல முற்பட்டது தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X