2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், யாழ்., சாவகச்சேரி பகுதியில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, எட்டு கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கில், ஹயஸ் ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட முற்பட்டபோதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்., அல்வாய் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 36 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .