2025 ஜூலை 19, சனிக்கிழமை

கடையை உடைத்தவர் வசமாக மாட்டினார்

Niroshini   / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

மீசாலை, புத்தூர் சந்தியில் அமைந்துள்ள கடையொன்றை உடைத்துக் கொண்டிருந்த சந்தேகநபரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை 12.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

கடையின் முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்தபோதே சந்தேகநபரை, பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

சந்தேகநபர், இதற்கு முன்னரும் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு, கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X