Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சில மருத்துவர்கள், தாதியர்கள், அவர்களது பெருமளவான கடமை நேரத்தை, ஓய்வு விடுதியில் கழிப்பதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அவசர சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியர்கள், வைத்தியசாலையில் இருப்பதில்லை என்றும் அதன்போது அங்கு கடமையில் இருக்கும் ஊழியர்கள், வைத்தியர்களுக்கு அலைபேசியில் அழைப்பை மேற்கொண்டு தெரியப்படுத்திய பின்னரும் வைத்தியர்கள் தாமதமாக வருகை தருகின்ற நிலைமையே தற்போது காணப்படுவதறாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலைமையிலேயே, வைத்தியசாலை விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளர்கள் பிரிவில் சிகிச்சைப்பெற வருகின்ற நோயாளர்கள், பல்வேறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இந்த விடயம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு வினவிய போது, இது தொடர்பில்; முறைப்பாடுகள் கிடைத்தால் இதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
38 minute ago
2 hours ago