2025 ஜூலை 19, சனிக்கிழமை

கடலாமைகளுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 ஜனவரி 09 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

குருநகர் பழைய பூங்கா வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 கடலாமைகளை வெள்ளிக்கிழமை (08) மீட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மூன்று ஆமைகளையும் இறைச்சியாக்குவதற்கு சந்தேக நபர் வீட்டின் பின்பக்கம் கட்டி வைத்திருந்ததாகவும் மூன்று ஆமைகளும் தலா 48, 32 மற்றும் 30 கிலோ கிராம் நிறையுடையவை என பொலிஸார் கூறினர்.

கைதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X