2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடலாமைகளுடன் கைது செய்யப்பட்டவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-   செல்வநாயகம் கபிலன்

மாதகல், குசுமன்துறைப் பகுதியில் வீடொன்றில் இரண்டு கடலாமைகளை வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன், இன்று வியாழக்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

அத்துடன், மீட்கப்பட்ட ஆமைகளை யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளின் உதவியுடன் ஆழ்கடலில் விடுமாறு நீதிவான் பணித்தார்.

சந்தேகநபர், ஆமைகளை இறைச்சியாக்குவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற இளவாலைப் பொலிஸார், சந்தேகநபரைக் கைதுசெய்து, சுமார் 2 அடி நீளமும், 3 அடி அகலமும் இரண்டு ஆமைகளை உயிருடன் மீட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X