2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடலாமையை எடுத்துச் சென்றவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 02 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை, பனிப்புலம் கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் பிடிபட்ட கடலாமையை எடுத்துச் சென்ற மீன் வியாபாரியை, சனிக்கிழமை (02) கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய பொலிஸாருக்குக் கிடைத்ததகவலின் அடிப்படையில் கடலாமையினை மோட்டார் சைக்கிளில் எடுத்துசென்றபோது கைதானவர் சுழிபுரம் பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய மேற்படி நபரைக் கைதுசெய்ததாகப் பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட கடலாமையினை நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னர் ஆழ் கடலில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எடுத்துச் சென்ற வியாபாரிக்கு எதிராக மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X