2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடலாமையைப் பிடித்து இறைச்சியாக்கியவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 நவம்பர் 16 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். அரசரட்ணம்

கடலாமையைப் பிடித்து, இறைச்சியாக்கிய மீனவர்கள் நால்வருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால்,  புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.

மண்டைத்தீவுக் கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், ரோலர் படகு ஒன்றைச் சோதனையிட்டனர். இதன்போது, குறித்த படகுக்குள் உயிருள்ள ஆமை மற்றும் ஆமை இறைச்சி கைப்பற்றினர்.

இதையடுத்து, குருநகரைச் சேர்ந்த மீனவர்கள் நால்வரையும் கைதுசெய்து யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பதில் நீதவான், அவர்களை செவ்வாய்க்கிழமை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர்களை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X