2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கடலில் வீழ்ந்து மீனவர் பலி

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

படகில் இருந்து தவறி கடலுக்குள் வீழ்ந்த மீனவரின் சடலம், இன்று புதன்கிழமை (27) கரையொதுங்கியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

குருநகரைச் சேர்ந்த றொபேர்ட் அல்பன் (வயது 38) என்ற மீனவரே சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த மீனவர், செவ்வாய்கிழமை (26) மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற போது, படகிலிருந்து தவறி கடலுக்குள் வீழ்ந்துள்ளார்.

மற்றைய மீனவர்கள் இவரைக் கடலில் தேடியபோதும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று இவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X