2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கடலட்டைகளுடன் நான்கு பேர் கைது

Gavitha   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை கடற்படையினர் கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (06) ஒப்படைத்துள்ளதாக, யாழ். கடற்றொழில் நீரியல்வளதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்களிடமிருந்து 2,050 அட்டைகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலட்டைகளை பிடிப்பதற்கு, கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள போதும் குறித்த மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்துள்ளதாக அந்த அதிகாரி  தெரிவித்தார்.

கைதான மீனவர்களுக்கு எதிராக பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X