2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கடலட்டை பிடித்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிபத்திரம் இன்றி மண்டைதீவுக்கடற்பரப்பில் 8 கடலட்டைகளைப் பிடித்த குருநகர் பகுதியினைச் சேர்ந்த மீனவருக்கு, 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (19) தீர்ப்பளித்தார்.

மண்டைதீவுக் கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த மேற்படி குருநகர் பகுதியினைச் சேர்ந்த மீனவரை, கடற்படையினர் பிடித்து, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (18) கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

அவரை நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் முற்படுத்திய போது அவர் தனது குற்றத்தினை ஏற்றுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X