2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கண்காணிப்புக்குழுவை சி.வி உருவாக்க வேண்டும்

Gavitha   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

ஐ.நா பரிந்துரைகளுக்கமைய விசாரணை நடைபெறுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கண்காணிப்புக் குழுவொன்றை உருவாக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'போரினால் வடமாகாண அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றவகையில், இந்தக் குழு, வடமாகாண முதலமைச்சரால் உருவாக்கப்படவேண்டும். பரிந்துரைகள் நடைபெறுவதைக் கண்காணிப்பதுடன், வெளிநாட்டு கண்காணிப்பாளர்களிடம், இங்குள்ள தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் தெரியப்படுத்த வேண்டும்.

தமிழர்கள் சார்ந்து சர்வதேசத்தில் இயங்கும் எந்த அமைப்பும் ஐ.நா.வில் பதியப்படவில்லை. ஐ.நா அறிக்கையின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தங்கள் அறிக்கைகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தை காப்பாற்றியது தாங்கள் எனக்கூறுகின்றனர்.

ஐ.நா விசாரணை அறிக்கை மார்ச் மாதமே வெளிவந்திருந்தால் இதைவிட பலமாக அமைந்திருக்கும். 250 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இலங்கை சாட்சியங்கள் 300 மற்றும் வெளிநாட்டு சாட்சியங்கள் 3,000 உள்ளடங்கியிருந்தன. குற்றம் செய்தவர்கள் என சாட்சியங்களால் கூறப்பட்ட பெயர்கள், செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இல்லை.

ஆனால், அந்தப் பெயர்களை அடையாளப்படுத்தும் வகையில் பதவி நிலை, பதவி வகித்த இடம் என்பன தற்போதய அறிக்கையில் காணப்படுகின்றன. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இலங்கைக்கு ஆதரவான அறிக்கை வெளியிடப்படும் என நாடாளுமன்ற தேர்தலில் கூறப்பட்டது. அதற்கு எதிராக கட்சிகள், முதலமைச்சரின் தீர்மானம் என்பன வலுச்சேர்த்தன. ஜெனீவா தீர்மானம் நிறைவேறுவதற்கு முன்னராக தீர்மானம் இவ்வாறு தான் இருக்கப் போகின்றது என்ற முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசுடனும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் போன்ற சிலருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

'தற்போது கலப்பு முறைதான் என்று கூறப்படுகின்றது. ஆனால், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உள்ளக விசாரணை தான் நடைபெறப்போகின்றது என்று கூறுகின்றனர், அதனை நாங்கள் செய்யவுள்ளோம்' எனத் தமிழ் தலைமைகள் கூறுகின்றன. யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X