2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கத்தோலிக்க திருமறைத் தேர்வு 2017

Kogilavani   / 2017 ஜூன் 28 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

யாழ்ப்பாணம், மறைக்கல்வி நடுநிலையம் நடத்தும் பாடசாலை மாணவர்களுக்கான கத்தோலிக்க திருமறைத் தேர்வு 2017க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கத்தோலிக்க மாணவர்களின் மறை அறிவை வளர்க்கும் முகமாக, வருடாந்தம் இந்த மறைத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. தரம் 3 முதல் 11 வரையான மாணவர்களிடையே, அவர்களின் தரங்களுக்கேற்ப  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, பரீட்சை நடைபெறும்.

இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பெயர்ப்பட்டியலை, ஜூலை மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர், “பணிப்பாளர், மறைக்கல்வி நடுநிலையம், ஆயர் இல்லம் யாழ்ப்பாணம்” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, பாடசாலை அதிபர்களிடம் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X