2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கரையொதுங்கிய மீனவர்கள் தமிழ்நாடு திரும்பினர்

Gavitha   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு வந்த தமிழ்நாட்டு மீனவர்கள், கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால், பருத்தித்துறை கடற்பரப்பில் கரையொதுங்கியிருந்ததையடுத்து, அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (04) மீண்டும் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

படகில் எரிபொருள் நிறைவடைந்திருந்த நிலையில், கரையொதுங்கிய மீனவர்களை மீட்ட கடற்படையினர், யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகளுக்கு அது குறித்து தெரியப்படுத்தியிருந்தனர்.

இதன் போது, குறித்த மீனவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படாமல், அவர்களை மீண்டும் அவர்களது ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது.

பின்னர், காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலையில் மீனவர்களை சிகிச்சைக்கு உட்படுத்திய கடற்படையினர், அவர்களது படகுக்குத் தேவையான எரிபொருளையும் வழங்கி, அவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X