2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கறுக்காய்தீவு மக்கள் அவதி

Gavitha   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்;டத்தின், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கறுக்காய்;த்தீவு கிராம மக்கள் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கிராமத்தில் 57 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 168 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்தக் கிராமத்துக்கான குடிநீர் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் வேறு இடங்களில் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளது.

கிராமத்துக்கான பிரதான வீதியாக காணப்படும் தம்பிராய் சந்தியிலிருந்து கறுக்காய் தீவு வரையான வீதி, கடந்த பல ஆண்;டுகளாக எந்தவித புனரமைப்புமின்றியுள்ளது. வீதி தற்போது பாரிய குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. சைக்கிளில் கூட பயணிக்க முடியாதளவுக்கு வீதி காணப்படுகின்றது.

வீதி, குடிநீர், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X