2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கற்பூர வியாபாரிகளால் பக்தர்களுக்கு அசௌகரியம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா, தற்போது நடைபெற்று வருகையில் ஆலயத்தின் முன்வாயிலை அண்டிய பகுதிகளில் கற்பூர வியாபாரிகள் ஆக்கிரமித்து ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர்.

நடமாடும் கற்பூர விற்பனைக்கு தடையெனவும், உட்கார்ந்து விற்பனை செய்வதற்கு மாநகர சபை இடக்குத்தகைக் கட்டணம் அறவிட்டு கற்பூரம் விற்பனை செய்ய அனுமதித்தது.

உட்கார்ந்து விற்பனை செய்தால், விற்பனை போதாது எனவும் மாநகர சபைக்கு வழங்கிய கட்டணத்தையும் பெறமுடியாத நிலையேற்படும் எனக்கூறும் கற்பூர வியாபாரிகள் எழுந்து சென்று பக்தர்களுக்கு விற்பனை செய்வதாகக் கூறுகின்றனர்.

வறுமையின் நிமித்தம் சிறு இலாபத்தை பெறும் நோக்கில் அவர்கள் கற்பூரம் விற்பனை செய்வதாக இருந்தாலும், ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களை அவர்கள் தொந்தரவு செய்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .