2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்விசாரா ஊழியர்களின் கடமை தொடர்பான அறிவித்தல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற கல்விசார ஊழியர்களது கடமைகள் தொடர்பாக, வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற கல்விசார ஊழியர்களது சீருடை, நேர முகாமைத்துவம், மொழிப்பாவனை, அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பாடற்ற தன்மை, மாணவர்களுடன் கொண்டுள்ள உறவு நிலை, பாடசாலை விடுமுறை காலத்தில் பாடசாலைக்கு சமூகமளித்து ஆற்ற வேண்டிய கடமைகளினை ஆற்றுதல், தாம் மேற்கொள்கின்ற கடமைகள் தொடர்பாக  கல்விசாரா ஊழியர்கள், தனித்தனியாக தினப்பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டு வலயக்கல்விப் பணிமனையினரால் மேற்பார்வை செய்யப்படுகின்ற போது தினப்பதிவுகள் காண்பிக்கப்படுவதுடன் குறித்த நடவடிக்கைகளிளை மேற்கொள்ளாத ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா தெரிவித்துள்ளார்.

கல்விசார ஊழியர்களுக்கு அவர்களது கடமைகள் தொடர்பாக அறிவுறுத்தல் அளிக்கும் வகையில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில்; அவர்களுக்குரிய கடமைப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .