Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில், சர்வதேச கலப்பு நீதிமன்றம் மற்றும் உள்ளக பொறிமுறை ஆகியவற்றின் மூலம் பகுதி பகுதியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் செய்திக்குறிப்பொன்றை அவர், இன்று திங்கட்கிழமை (21) அனுப்பிவைத்துள்ளார்.
'மனித உரிமைப் பேரவையின் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணை முறையும் அமெரிக்கா முன்மொழிகின்ற உள்ளக விசாரணை முறையும் தேவை என்பதையே குறிப்பிடுகின்றேன் .
தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்த வரையில், சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொண்டாலும், இந்த நீதிமன்றங்கள் எத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்கப் போகின்றன என்பதை ஆராயும் போது, பாதிக்கப்பட்டவர்களின் நன்மையை கவனத்தில் கொண்டு, சில குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை சர்வதேச கலப்பு நீதிமன்றத்தில் விசாரிப்பது வசதியாக அமையாது. அதேபோல் எல்லா குற்றங்களையும் உள் நீதிமன்றத்தில் மாத்திரம் விசாரணை செய்வது கடினமான விடயம் என்பது உண்மை' என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பிரச்சினையற்ற சில விசாரணைகளை தவிர்ந்த ஏனையவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எந்த நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என்பதை ஓர் விசேட அமைப்பு மூலம் அந்தந்த நீதிமன்றத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதே, மேலானது என்று அந்த செய்திக்குறிப்பில் ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
36 minute ago
2 hours ago