Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை தவிர்த்து, கலப்பு நீதிமன்றம் ஊடாக சர்வதேச நீதிமன்றத்தினூடான விசாரணையை வரவேற்கின்றோம். குற்றவியல் விசாரணை, கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக நடத்தப்படுதல் தொடர்பில் முழுமையான தெளிவு வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அவரது கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்விடயத்தைத் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
'உள் விசாரணையை நிராகரித்து கலப்பு நீதிமன்றத்தின் ஊடான விசாரணையை மேற்கொள்ளும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் கூறியதை நாங்கள் வரவேற்கின்றோம். உள் விசாரணையை நிராகரித்து சர்வதேச விசாரணை நடத்தப்படும் என சொல்லப்படுவதில் தெளிவுத்தன்மை இல்லாதுள்ளது. உள் விசாரணை நிராகரிக்கப்பட்டமை, கலப்பு நீதிமன்றத்தினூடான விசாரணை எவ்வாறு இடம்பெறும் என்பது தொடர்பில் முழுமையான தெளிவுவேண்டும்' என்றார்.
'குற்றவியல் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்யப்பட்டவர்கள் இனங்காணப்பட்டு, சர்வதேச தீர்ப்பாயங்கள் மூலம் தண்டனைகள், தீர்வுகள் வழங்கப்படவேண்டும் என்பதை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது ஐ.நா கூட்டத் தொடரில் கூறப்பட்ட அறிக்கையை விட, எதிர்வரும் 30ஆம் திகதி உலக நாடுகள், கூட்டத் தொடர்பில் வைத்து எடுக்கும் தீர்மானமே முக்கியத்துவம் பெறுகின்றது' என்றார்.
'தற்போதய இலங்கை அரசாங்கத்தில் குற்றங்கள் செய்த முன்னைய அரசாங்கத்தின் ஆட்களும் உள்ளனர். குற்றங்களுக்கு பங்காளியாக இன்றைய அரசும் உள்ளது. உள் விசாரணை என்பதையே இன்றைய அரசாங்கமும் எதிர்பார்க்கின்றது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா சபையில் வைத்து தமிழர்களுக்கு பிரதம நீதியரசர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பன கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தற்போதய அரசாங்கம் 3 முகங்களைக் கொண்ட அரசாங்கமாக காணப்படுகின்றது. சிங்கள மக்களுக்கு ஒருமுகமும், தமிழர்களுக்கு ஒரு முகமும், சர்வதேசத்துக்கு ஒரு முகமும் காட்டி வருகின்றது. இலங்கையில் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் நீதி என்பன தற்போது நம்பிக்கையில்லாமல் போயுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் கூறியுள்ளார்' என்றார்.
'இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும், என தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்கின்றோம். கட்சிபேதமின்றி அனைவரும் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றியமை மகிழ்ச்சியளிக்கின்றது. தமிழகம் தொடர்ந்தும் எமது மக்கள் பற்றி அக்கறையுடன் செயற்படும் என நம்புகின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago