Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 22 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சியில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கிய பல கிராமங்களில், இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (21) இரவு பெய்த மழையால், மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, பல கிராமங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லிமீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் வான் பாய்கின்றமையால் வீதிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு, மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த மக்கள், இராணுவத்தால், படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு, அனைத்து வான் கதவுகளும் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு, மூன்றடிக்கு வானும் பாய்கிறது. இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
30 minute ago
31 minute ago