2025 மே 19, திங்கட்கிழமை

குழு மோதலுக்கு தயாரான இருவர் கைது

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பளை பகுதியில் குழு மோதலுக்கு தயாராக இருந்த இருவரை வாள்களுடன் பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பளை பகுதியில் நேற்றிரவு (20) 10 மணியளவில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் தொடர்சியாக இன்று (21) அதிகாலை ஒரு மணிக்கு மோதலுக்கு தயாராக குழுவொன்று வாள்களுடன் சென்ற போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குழுவை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது, இருவர் வாள்களுடன் கைது செய்யப்பட்டதுடன், ஏனையோர் தப்பியோடியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பிச் சென்றவர்களையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X