Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
முல்லைத்தீவு, குமிழமுனை பகுதியில் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (05) இரவு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த அலித்தம் பிறிச்பால் (வயது 34) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
சம்பவ தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குடும்பஸ்தரை உழவு இயந்திரம் மோதியுள்ளது.
படுகாயமடைந்த இவர், முதலில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இறப்பு விசாரணை அதிகாரி என்.பிறேம்குமார்; மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago