Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
திருநெல்வேலி, கலாசாலை வீதியிலுள்ள கடையில் நேற்று திங்கட்கிழமை (28) மாலை சிகரெட் வாங்க வந்த இளைஞர்கள், கடைக்காரர் சிகரெட் வழங்க தாமதமாக்கியமையால் கடையில் பணியாற்றிய இளைஞன், கடை முதலாளி மற்றும் நியாயம் கேட்க வந்த வயோதிபர் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடைக்கு மதுபோதையில் சென்ற இரண்டு இளைஞர்கள், சிகரெட் தருமாறு கேட்டபோது, கடையில் கூட்டம் அதிகமாக இருந்தமையால் அவர்களுக்கு சிகரெட் வழங்குவதற்கு தாமதமாகியது.
இதனையடுத்து, அந்த இரண்டு இளைஞர்களும் கடையில் பணியாற்றிய இளைஞர் மற்றும் கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன், நியாயம் கேட்கச் சென்ற முதியவர் ஒருவரையும் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றனர்.
இது தொடர்பில் கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக இவ்வாறான ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், ரவுடிகளை கைது செய்யுமாறு வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவுட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
1 hours ago
4 hours ago