Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தனியொருவரை குடும்பத் தலைவராகக் கொண்ட 45 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத உதவியாக சுயதொழில் மேற்கொள்ள 8 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாயை சமூக சேவை நலன்புரி கால்நடை அபிவிருத்தி அமைச்சு வழங்கியுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் ம.பிரதீபன், இன்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.
தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 14 குடும்பங்களுக்கும் தலா 18 ஆயிரம் ரூபாய் வீதம் 22 குடும்பங்களுக்கும், தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் 8 குடும்பங்களுக்கும், தலா 10 ஆயிரம் வீதம் 1 குடும்பத்துக்கும் வழங்கப்படவுள்ளன.
மேற்படி குடும்பங்கள் பொருத்தமான தொழில் முயற்சியில் முதலீடுகள் மேற்கொள்ள இந்த உதவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனை வைத்து கோழி, ஆடு, வளர்ப்பு, தையல் முயற்சி மற்றும் சிறுகைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடமுடியும்.
மேற்படி திட்டத்துக்கு உள்வாங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவுடன் தொடர்புகொண்டு கொடுப்பனவுக்கான காசோலையை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
40 minute ago
46 minute ago