2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிறுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சிறுப்பிட்டி மத்தி நீர்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த அப்பாக்குட்டி இராசதுரை (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் உள்ள வீடொன்றில், சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அச்சுவேலி பொலிஸார், குறித்த பகுதியினைச் சுற்றி குற்றப்பிரதேசமாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை, பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X