2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: இருவர் கைது

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரேமேஸ் மதுசங்க, நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, தரணிக்குளம் பகுதியில், வீட்டில் தனிமையில் இருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய இருவரை சனிக்கிழமை (27) வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சிறுமியின் தாய் வேலைக்கென வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளதாகவும் இவர்களது குடும்பத்தில் மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளதாகவும் தந்தை கூலி வேலை செய்பவர்; எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவ தினம் சிறுமியின் தந்தை, கூலி வேலைக்கென வெளியில் சென்றிருந்த வேளையிலேயே குறித்த சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள், 32, 21 வயதடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X