2025 ஜூலை 19, சனிக்கிழமை

சிறுமியைத் தாக்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி பகுதியில் 17 வயது சிறுமியைத் தாக்கி காயப்படுத்திய அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய குடும்ப பெண் ஒருவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் ,சனிக்கிழமை (09) உத்தரவிட்டார்.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சிறுமிக்கும் மேற்படி பெண்ணுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக மேற்படி குடும்ப பெண், சிறுமியைத் தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட் பெண் கடந்த 07ஆம் திகதி வல்வெட்டித்துறை  பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X