2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் நிலையம் திறப்பு

George   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் தொடர்பான பொலிஸ் நிலையம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் வியாழக்கிழமை (01) மாலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டடம் அமைப்பதற்கு சிறுவர் மற்றும் விவகார அமைச்சு 5 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி, இதற்கான அடிக்கல் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி நாட்டப்பட்டது.

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கி வந்த சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு இனிவருங்காலத்தில் தனியாக செயற்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .