2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சில பிரிவுகளின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 25 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் வணிக முகாமைத்துவப் பீடங்களின் சில பிரிவுகளது  கல்விச் செயற்பாடுகள், இன்று திங்கட்கிழமை (25) முதல் ஆரம்பமாகியுள்ளன.

குறித்த பல்கலைக்கழக கலைப்பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள், வணிக முகாமைத்துவ பீட மாணவர்களின் முதலாம் மற்றும் இறுதியாண்டு கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.  

விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவ குழுக்களுக்கிடையில், கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பு காரணமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த வாரத்தில், மருத்துவம், விவசாய மற்றும் சித்த வைத்திய பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.  

தற்போது, கலை, வணிக முகாமைத்துவ பீடத்தின் சில பிரிவுகளின் கல்விச் செயற்பாடுகள், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பீடங்களின் ஏனைய பிரிவுகள் மற்றும் விஞ்ஞான பீடம் ஆகியவற்றின் கல்விச் செயற்பாடுகளை, விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று துணைவேந்தர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X