2025 ஜூன் 25, புதன்கிழமை

சைவ சமய அறிவுப் பரீட்சையும் செயல்முறைப் பரீட்சையும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

வண்ணை சாந்தையர் மடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய சைவ சமய அபிவிருத்திக் கழகத்தின் பாடசாலை மாணவர்களுக்கான சைவ சமய அறிவு, செயல்முறைப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளதாக சைவசமய அபிவிருத்திக்கழக பரீட்சைச் செயலர் சு.சிறிகாந்தன் தெரிவித்தார்.

தரம் - 1 மற்றும் 2 மாணவர்களுக்கான நீதி நூல் மனனப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதியும் தரம் 3 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான சைவசமய அறிவுப்பரீட்சை ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதியும், இதே பிரிவு மாணவர்களுக்கான கோலம் போடுதல், மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல் ஆகிய செயன்முறைப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 1ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள், வண்ணார்பண்ணை நாவலர் வீதியில் இல 82 அமைந்துள்ள சைவ சமய அபிவிருத்திக் கழக அறிவகத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .