2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சிவாஜி லிங்கத்தின் பிரேரணை காலாவதி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை, சபையில் எந்த உறுப்பினர்களும் வழிமொழிய முன்வராமையால் அதனை காலாவதியான பிரேரணையாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற போது, 'இலங்கை தீவிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகத்தையும், ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்க வேண்டும்' என்ற பிரேரணையை சிவாஜலிங்கம் சபையின் முன்வைத்தார்.

சிவாஜிலிங்கத்தின் இந்தப் பிரேரணையை உறுப்பினர்கள் எவரும் வழிமொழிய முன்வரவில்லை. இதனால் இதனை காலாவதியான பிரேரணையாக அறிவிப்பதாக அவைத்தலைவர் கூறினார்.

இந்தப் பிரேரணை தொடர்பில் உறுப்பினர்களுக்கு விளங்கவில்லையெனவும், பிரேரணை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு தனக்கு 5 நிமிடங்கள் அனுமதி தருமாறு அவைத்தலைவரிடம் சிவாஜிலிங்கம் கூறினார்.

அதற்கு அவைத்தலைவர் அனுமதி வழங்கியதையடுத்து சிவாஜிலிங்கம் தனது பிரேரணை தொடர்பில் விளக்கமளித்தார்.

ஆனால், அதன் பின்னரும் உறுப்பினர் எவரும் வழிமொழிய முன்வரவில்லை. இதனையடுத்து அதனை காலாவதியான பிரேரணையாக அவைத்தலைவர் அறிவித்தார்.

இந்த பிரேரணையை அடுத்த அமர்வில் சமர்ப்பிப்பதற்கு அனுமதி தருமாறு சிவாஜிலிங்கம் கோரினார். ஆனால் அதற்கு அவைத்தலைவர் மறுப்புத் தெரிவித்துடன் இன்னும் 6 மாதங்களுக்கு இந்தப் பிரேரணையை சபையில் எடுக்க முடியாது எனக்கூறினார்.

நிராகரிக்கப்பட்ட பிரேரணையையே 6 மாதங்களுக்கு எடுக்க முடியாது எனவும் காலாவதியான பிரேரணையை எடுக்க முடியும் எனவும் சிவாஜிலிங்கம் வாதிட்டார். அதனை அவைத்தலைவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

இதனையடுத்து,'சபையில் சர்வதிகாரமாக நடக்க வேண்டாம் எனவும், இந்த அவையில் இந்தப் பிரேரணையை சமர்ப்பிப்பேன்' சிவாஜிலிங்கம் கூறி அமர்ந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .