2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சாவகச்சேரி கடற்கரையில் தங்குகூசி வலைகள் மீட்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

கடற்கரை சூழல் பாதுகாப்பு சர்வதேச செயற்றிட்டத்தின் கீழ், சாவகச்சேரி கோவில் குடியிருப்பு கடற்கரையை துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்ற போது, பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 5 தொகுதி தங்குகூசி வலைகள், திங்கட்கிழமை (21) மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

'தென்மராட்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் கடற்கரை சூழல் பாதுகாப்பு சர்வதேச செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பொதுஅமைப்புக்கள், பொலிஸார், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். கோவில் குடியிருப்பு பகுதியில் துப்பரவு பணிகள் மேற்கொண்ட போது, கடற்கரைப் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி தங்குகூசி வலைகள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட வலைகள், சுமார் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது எனவும், அவற்றை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்' என அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .