2025 ஜூன் 25, புதன்கிழமை

சங்கிலியனின் வாளில் விளம்பர பதாகை

Gavitha   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்புக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் மென்பான நிறுவனம் ஒன்றின் விளம்பர பதாகையொன்று பொருத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னான சங்கிலியனின் சிலையானது யாழ். மாநகர சபையால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் கௌரவமிக்க மன்னரான சங்கிலியனின் சிலையானது போற்றப்படக்கூடிய வகையில் இருக்கும் நிலையில், சிலையை கேலிக்குள்ளாக்கும் வகையில் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் இவ்வாறு விளம்பர பதாகை பொருத்தப்பட்டுள்ளது.

மாநகர சபை அனுமதி பெறப்பட்டு இது பொருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மாநகர சபை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது தமக்கு தெரியாது எனவும் அவ்வாறான அனுமதி எதையும் கொடுக்கவில்லையெனவும் உடனடியாக அதனை அகற்றுவதாகவும் நிர்வாகத்தினர் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .