Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
இனந்தெரியாத ரௌவுடிக் கும்பலொன்று பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள சட்டத்தரணியொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டிலிருந்தவர்களை தாக்கியமைக் கண்டித்து, யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள், வியாழக்கிழமை (08) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டிருந்ததுடன், அவர்களில் ஒரு தரப்பினர், சட்டத்தரணியின் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை துன்புறுத்தியதுடன் பொருட்களையும் சேதப்படுத்தியிருந்தனர்.
இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்குச் செல்லாது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago