2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சந்தேகநபர்கள் ஆரோக்கியத்துடன் உள்ளனர்

Niroshini   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபர்கள் தாங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி தெரிவித்திருந்தனர்.

ஆனால், திங்கட்கிழமை (08) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 10 சந்தேகநபர்களும் முழுமையான தேக ஆரோக்கியத்துடன் மன்றுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டனர்.

தங்கள் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சந்தேகநபர்கள் கடந்த 25 ஆம் திகதி நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும் போது, கூறியிருந்தனர்.

இருந்தும், அவர்கள் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்தனரா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X