2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் பதவிகளால் பயனில்லை

Gavitha   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் நியமிக்கப்பட்டதும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் ஆகியமையும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை (07) அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் தேசிய பிரச்சினையானது இன்றும் பிரதான பிரச்சினையாக இருக்கின்றது. தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் இனப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி- தீர்வை வைத்து முற்போக்கு தேசிய ஜனநாயக அடிப்படையில் கொள்கையை உருவாக்கி பரந்த அடிப்படையில் மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பதே சரியான அரசியல் மார்க்கமாக அமையும்
பொருளாதார பிரச்சினை அடிப்படையானதாகும். சில மாதங்களில் அதன் தாக்கம் பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் தேசிய இனப்பிரச்சினையும் இருக்கின்றது. ஐக்கியப்பட்ட இலங்கையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சித் தீர்வாகவே அரசியல் தீர்வு அமையவேண்டும்.

இத்தகைய தீர்வு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லீம், மலையகத் தமிழர்கள் மற்றும்  ஏனைய சிறு சமூகங்களுக்கும் உரியதாக இருக்கும். உடனடி தீர்வாக எல்லா மட்டங்களிலும் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தி இனங்களுக்கு இடையிலான ஐக்கியம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றை வளர்க்க வேணடும். இது சுயாட்சி நோக்கிய தீர்வுக்கு முதற்படியாகவும் அடிப்படையாகவும் அமைய முடியும். இனங்களுக்கிடையிலான முரண்பாட்டுக் கொதி நிலையை தாழ்நிலைக்கு கொண்டு வரவும் முடியும்.

நாடாளுமன்ற பதவிகள் ஊடாக இதுவரை தமிழ் மக்களையும் ஏனையோரையும் ஏமாற்றி தத்தமது நலன்களுக்காக மட்டும் செயற்பட்டு வந்தவர்களை நம்பி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடமுடியாது. கொள்கையற்ற தலைமைகளை நிராகரித்து மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று தமக்கான அரசியல் பாதையில் பயணிப்பதே இன்றை தேவையாகும்' என அந்த அறிக்கiயில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .