Janu / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி, வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது.
யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் பேருந்திலிருந்து பெண்ணொருவர் இறங்க முற்பட்ட போது, சாரதி அவசரமாக பேருந்தை நகர்த்தியமையால் , அப்பெண் விழுந்து படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (19) இடம்பெற்றுள்ளது .
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் பேருந்தின் சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போது நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் ,
இந் நிலையில் வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினரால் குறித்த பேருந்தின் வழித்தட அனுமதியை இரத்து செய்துள்ளதுடன் பேருந்துகள் போட்டி போட்டு ஓடுவதனாலையே அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும் , அவ்வாறு அதிகவேகமாக பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு முறையிடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எம்.றொசாந்த்
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago