2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சாரதியின் அவசரத்தால் வழித்தட அனுமதி இரத்து

Janu   / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து  , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி,  வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது. 

யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில்  பேருந்திலிருந்து  பெண்ணொருவர் இறங்க முற்பட்ட போது, சாரதி அவசரமாக பேருந்தை நகர்த்தியமையால் , அப்பெண் விழுந்து படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (19)   இடம்பெற்றுள்ளது .

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் பேருந்தின் சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய  போது  நீதிமன்ற உத்தரவின்  கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் ,

இந் நிலையில்  வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினரால்  குறித்த பேருந்தின் வழித்தட அனுமதியை  இரத்து செய்துள்ளதுடன்  பேருந்துகள் போட்டி போட்டு ஓடுவதனாலையே அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும் , அவ்வாறு அதிகவேகமாக பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள  வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு முறையிடலாம் எனவும்  தெரிவித்துள்ளனர்.

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .