Freelancer / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திற்கான மக்கள் கலந்துரையாடல் ஒன்று யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
"சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே" எனும் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத் தலைவர் கரு ஜயசூரிய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், சமயத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். (R)
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago