2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

திடீர் வலிப்பு: 03 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

திடீரென ஏற்பட்ட வலிப்பினால் மூன்று பிள்ளைகளின் தாயொருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பகுதியைப் சேர்ந்த மதன் ஜெயமாலா (வயது 28) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிகாலையே கணவன் வேலைக்குச் சென்றுள்ளார். இரண்டு பிள்ளைகளும் பாடசாலைக்குச் சென்ற நிலையில் திடீர் வலிப்பு ஏற்பட்டு இவர் நிலத்தில் வீழந்து மயங்கியுள்ளார். 

தயாரின் நிலையினை அவதானித்த நான்கு வயது குழந்தை அழுததையடுத்து, அயலவர்கள் குறித்த பெண்ணை மீட்டு உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

எனினும், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், மரண விசாரணைகளை மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X